கொரோனா... பிரபஞ்சம் தற்போது அதிகமாக உச்சரிக்கும் வார்த்தை. கண்ணுக்கே தெரியாமல், அனைவரது கண்களிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா. சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியை வெகுவாக உலுக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவியதில் இருந்து இந்த அளவுக்கு ஒரே நாளில் இத்தனை உயிர்களை பலி கொண்டதில்லை என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். இதன் மூலம் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பை பரிசோதிக்க அனுமதி கோரும் தனியார் நிறுவனங்கள்
இத்தாலியை தொடர்ந்து தற்போது பிரிட்டனையும் கொரோனா வெகுவாக அச்சுறுத்தி வருகிறது. அங்கு உயிரிழப்பு நூறை கடந்து சென்றுவிட்டதால், வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறது பிரிட்டன் அரசு. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். எனினும், திட்டமிட்டபடி மே மாதத்தில் பள்ளிகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 264-ஐ கடந்துள்ளது. கொரோனாவின் தாக்குதல் மிக மோசமானதாக இருப்பதால், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் முடுக்கிவிட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
''எங்களுக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கள்'' - கொரோனாவைத் தடுக்க மணற்சிற்பம் சொல்லும் செய்தி
இஸ்ரேலில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டினர் வருவதற்கு அங்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் தென்பட தொடங்கியிருப்பதால், இனியும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது சரியாக இருக்காது என அந்நாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், கொரோனா குறித்து ஆப்பிரிக்கா விழித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!