அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் தொடர்பான தனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விளக்கியிருந்தார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்று தெரிவித்திருந்தார். கட்சி ஆரம்பித்தால் முதியவர்களை தவிர்த்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாகவும், கட்சியில் நிறைய பதவிகளை தவிர்த்து தேவையான பதவிகளை மட்டுமே வைத்துக்கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். அத்துடன் மக்களிடம் எழுச்சி வரவேண்டும் எனவும், அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!