கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்எல் எனும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர் தோல்விகளுடன் தொடரை தொடங்கிய சென்னை அணி, தோல்விகளின் பிடியிலிருந்து விடுபட்டதோடு மட்டுமின்றி அரையிறுதிக்கே முன்னேறி வியக்க வைத்தது. நடப்பு சீசனில், சென்னை விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது.
‘ஆடியான்ஸ்’ இல்லாத ஐபிஎல் போட்டிகள் : கொரோனாவால் வேறுவழியில்லை..!
இதனையடுத்து, முதல் கட்ட அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த கோவா அணியை தோற்கடித்தது சென்னை அணி. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தாலும் கோல்கள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது. அதேபோல், கொல்கத்தா அணி முதல் அரையிறுதியில் பெங்களூரு எஃப்சி அணியிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியது.
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க வாய்ப்பில்லை?
இந்நிலையில், கொல்கத்தா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வருகின்ற 14ம் தேதி இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் போலவே ஐஎஸ்எல் போட்டிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், இறுதிப் போட்டிக்கு அதிக ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் இறுதிப்போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (Football Sports Development Limited) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!