இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கும் ஒருவர் அடுத்த குடியரசுத் தலைவர் ஆக வரவேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அடுத்த குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. குடியரசுத்தலைவர் பதவிக்கு மோகன் பகவத்தே சரியான தேர்வு என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், குடியரசுத்தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்று மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனிடையே, வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கும் ஒருவர் அடுத்த குடியரசுத் தலைவர் ஆக வரவேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ராம ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது அரசியல் பிரிவு ஆகிய பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஹிந்து ராஷ்டிரா முத்திரை கொண்ட ஒருவர் தான் நாட்டிற்கு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்