ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிப்பது குறித்து இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விளக்கம் கேட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பதவி வகித்து வருகிறார். ஆதாயம் தரும் இரு பதவிகளை ஒருவர் வகிக்கக் கூடாது என்ற பிசிசிஐயின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி டிராவிட்டிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாரான ஸ்ரீதர் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைமை உடற்பயிற்சி நிபுணரான ஆண்ட்ரு லீபெஸ் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக பணியாற்றி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவுக்கு விரிவான பதில் அனுப்பியிருப்பதாக டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகக் குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் டிராவிட் தெரிவித்துள்ளார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி