திருத்தணியில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி சுந்தரி (35). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். காலை வழக்கம்போல் தனது கிராமத்திலிருந்து திருத்தணி பூ மார்க்கெட்டுக்கு சென்று பூக்களை வாங்கிய சுந்தரி, பின்னர் சென்னை செல்வதற்காக இரண்டாவது ரயில்வே கேட் வழியாக சென்று கொண்டிருந்தார்.
செல்போன் பேசியபடியே அவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரேணிகுண்டா பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவேக விரைவு ரயில், சுந்தரி மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சுந்தரி உயிரிழந்தார். இரண்டாவது மற்றும் முதல் ரயில்வே கேட் வழியாக கடக்கும் போது பெரும்பாலான மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்போன் பேசியபடி கடப்பதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடந்தது வருவதாக பயணிகள் கூறுகின்றனர்.
எனவே ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால்தான், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் பயணிகள் கூறுகின்றனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்