மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ளது பாதான் கிராமம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் மளமளவென தீ வேகமாக பரவியது. இதில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 25 பேர் தீயில் கருகி பரிபாதமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. இருப்பினும் எரியும் பீடியை சரியாக அணைக்காமல் யாரோ ஒருவர் போட்டுச் சென்றது கூட, தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஒருசிலர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான தொகையை அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளார்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!