2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றியதாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள ஆதிமனிதனின் மண்டை ஓடு ஆராய்ச்சியாளர்களின் கூற்றை பொய்யாக்கியுள்ளது.
மனித இனம் முதன்முதலில் ஆப்பிரிக்க பகுதிகளில் தோன்றியதாக கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், மனித இனத்தின் முன்னோடியாக கருதப்படும் ஹோமோ செப்பியன்ஸ் எனப்படும் ஆதிமனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி படிப்படியாக மனித இனம் உருவானதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கிழக்கு ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிமனிதனின் மண்டை ஓடுகளை சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் அவை சுமார் 3 லட்சம் ஆண்டுகள், அதாவது ஆராய்ச்சியாளர்கள் முன்பு குறிப்பிட்டிருந்ததை விட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து வந்த ஆதிமனிதனுடையது என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனித மூளை படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும், இதுவரை நினைத்ததை போல வேகமாக அவை வளர்ச்சியடையவில்லை என்பதையும் இந்த கண்டுபிடிப்பின் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த பரிணாம வளர்ச்சியின் வேகத்தின்படி விரைவில் மனித இனத்தின் மூளை வளர்ச்சியின் உச்சத்தை தொடலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?