Published : 26,Feb 2020 02:02 PM

"வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்" நடிகர் ரஜினிகாந்த் காட்டம் !

If-you-cannot-control-violence-then-resign-says-rajinikanth

வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லையென்றால் ராஜினாமா செய்துவிடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.

image

சென்னை போயஸ்கார்டன் சாலையில் தன் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் "டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்திற்கு (வன்முறை) உளவுத் துறையின் தோல்வியே காரணம்; அதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன். ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வந்திருக்கும் நேரத்தில் இந்த வன்முறை நிகழ்ந்து இருக்கக் கூடாது. மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன். சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்; இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்" என்றார்.

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு 

image

இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் "சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்" என தெரிவித்தார். மேலும் தொடர்ந்த ரஜினிகாந்த் "சிஏஏ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகிவிட்டது. எனக்கு தெரிந்தவரை சிஏஏ திரும்ப பெறமாட்டாது, எவ்வளவு போராடினாலும் பயனில்லை என்றே தோன்றுகிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த ரஜினிகாந்த் "என்ன உண்மையோ அதை சொல்கிறேன்; என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது" என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்