பாகுபலிக்கு பதிலாக ட்ரம்பின் முகத்தை மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாளை இந்தியாவுக்கு வர இருக்கிறார். அவர் செல்லவிருக்கும் நகரங்கள் அனைத்தும், ட்ரம்பை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ட்ரம்ப்பிற்கு வழங்க பல்வேறு தரப்பினரும் பரிசுப் பொருட்களை தயாரித்தும், அனுப்பியும் வருகின்றனர். அந்த வகையில், கோவை வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த தையல் கலைஞரான விஸ்வநாதன் என்பவர் பருத்தி துணியால் ஆன குர்தாவை ட்ரம்புக்கு பரிசாக அனுப்பி உள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ட்ரம்ப்பின் உருவங்களை அரிசியில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். நுண்கலை ஓவியம் படைப்பதில் பேரார்வம் கொண்ட இவர், இந்தியாவுக்கு வருகை தரும் ட்ரம்ப்புக்கு அதனை பரிசாக கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சொந்தமாக தாஜ்மஹால் வைத்திருந்த ட்ரம்ப்!
இது இப்படி இருக்க இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் பிரத்யேக வீடியோக்கள் மூலம் ட்ரம்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாகுபலி படத்தில் வரும் காட்சியில், கதாநாயகனுக்கு பதிலாக ட்ரம்பின் முகத்தை மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய நண்பர்களை காண எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG — Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!