ஒரு மாநிலத்திற்கு அடிக்கடி தேர்தல் வருவது நல்லதல்ல என்றும், உள்ளாட்சி தேர்தல் வந்தால் இப்போது இருக்கின்ற அரசு தானாக விழுந்துவிடும் என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ஒரு மாநிலத்திற்கு அடிக்கடி தேர்தல் வருவது நல்லதல்ல. இருக்கின்ற ஆட்சி இன்னும் திறமையாகவும், ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ளக் கூடிய அனைத்து முயற்சிகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடந்தது என்று சொன்னால் இப்போது இருக்கின்ற ஆட்சி தானாக விழுந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் தேவையில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டிவரும். அது யாருக்குமே நல்லதல்ல. இந்த நிலையற்ற தன்மையைப் பார்க்கும்போது முதலில் உள்ளாட்சித் தேர்தல் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தேர்தல் சந்திக்கப் போகிறோம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது” என்று கூறியிருந்தார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி