காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ‘டியூப் லைட்’ என்று பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் மோடி பேசினார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம், எந்த மத நம்பிக்கை கொண்டவரையும் பாதிக்காது என்றார். தாங்கள் மக்களை இந்தியர்களாக பார்ப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை அவரவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் அணுகுவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
அரசியல் சாசனத்தை பற்றி அடிக்கடி பேசும் காங்கிரஸ் ஒரு காலத்தில் அதை தூக்கி எறிந்து எமர்ஜென்சியை கொண்டு வந்த கட்சி என மோடி குறிப்பிட்டார். காங்கிரசார் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை பற்றி படிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொண்டது போலாகும் எனவும் மோடி குறிப்பிட்டார்.
தமது ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் அரசின் செயல்களை பார்த்த மக்கள், தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறுக்கிட்டு ஏதோ பேசினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், தாம் 40 நிமிடங்களாக பேசி வருவதாகவும், ஆனால் தற்போதுதான் எதிர்வரிசைக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது என்றார். மேலும், சில டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்கின்றன என ராகுலை மறைமுகமாக மோடி விமர்சித்தார்.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?