நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேரும், தங்களுக்கு இன்னும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், தங்களது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை, 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு தடை விதித்தது.
இதனிடையே 4 பேரையும் தனித்தனியே தூக்கிலிடுவதற்கு அனுமதிகோரி மத்திய அரசு மற்றும் திஹார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரும் தங்களுக்கான வாய்ப்புகளை 7 நாளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது.
சிட்டுக் குருவிகளை காப்பாற்றும் வடசென்னை பக்ஷி ராஜன்.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரி மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார். இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, பாட்டியாலா நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிகள் 4 பேரில், மூவரின் நீதி வாய்ப்புகள் நிறைவடைந்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நால்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதி தர்மந்திர ரானா உத்தரவிட்டார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்