கத்தாருடன் சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் உறவைத் துண்டித்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட 6.5 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர்.
அவர் எழுதிய கடிதத்தில், “ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி செய்கின்றது போன்ற காரணங்களைச் சொல்லி, சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் கத்தார் நாட்டுடனான வர்த்தக, பொருளாதார, தூதரக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளதால் கத்தாரில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் இந்தியர்களின் உறவினர்கள் இந்த பிரச்னையால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பிரச்சனையில் இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இது வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பிரச்னைதான் என்றாலும், அங்குள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமானது. உங்களுடைய தலைமையில் இந்த பிரச்னை விரைவாக சரி செய்யப்படும் என்று நம்புகிறேன். இந்த சவாலான சூழலை கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் கவனமாகக் கையாண்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்