தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
வழக்கறிஞர் சரவணன் என்பவர் நேற்று தாக்கல் செய்த முறையீட்டில், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனவும் எனவே குடமுழுக்கிற்கு தடை தேவை எனவும் முறையீட்டில் வலியறுத்தினார்.
கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ததை அடுத்து சரவணனின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரித்தது. விசாரணையின்போது விளக்கம் அளித்த தமிழக அரசு, நவம்பர் மாதமே தொல்லியல் துறையிடம் அனுமதி பெறப்பட்டதாக தெரிவித்தது. 15 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்ததாக தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் குடமுழுக்கு நடத்தும் மொழி குறித்து விளக்கம் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, தமிழ், சமஸ்கிருத மொழிகளுக்கு சமமான மதிப்பே வழங்கப்படுகிறது. பிப்ரவரி 5-ம்தேதி தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
குடமுழுக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
“அந்த போலீஸ் ஸ்டேஷனா இல்ல இந்த ஸ்டேஷனா”- நகை பறிகொடுத்தவர் அலைக்கழிப்பு
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?