அசாமில் தனி மாநிலம்கோரி ஆயுதம் தாங்கி போராடிய போடோ அமைப்பினருடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
போடோலேண்ட் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் சத்யேந்திர கார்க், அசாம் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா மற்றும் தனி மாநில போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போடோ இன அமைப்புகள் நான்கின் பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி போடோ தனி மாநில கோரிக்கையை கைவிடுவதுடன் ஆயுதப் போராட்டங்களையும் நிறுத்திக்கொள்ள 4 போராட்ட அமைப்புகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. அதேசமயம் அசாமின் போடோ பகுதி வளர்ச்சிக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் சிறப்பு உதவிகளை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த நிகழ்விற்கு சாட்சியாக அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவாலும் கையெழுத்திட்டார். இதன் பின் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த தினம் என மகிழ்ச்சி தெரிவித்தார். இது அசாமில் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
போடோ பகுதி மக்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் கலாசார மேம்பாட்டுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். போடோ தனி மாநில போராட்டங்களில் 4 ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்