Published : 05,Jun 2017 03:04 AM
மியான்தத்தை மிரட்டிய ஸ்ரீகாந்த்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தை மிரட்டினேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதிய சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இதன் தமிழ் வர்ணனையை ஸ்ரீகாந்தும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் செய்தனர். அப்போது மழைக் குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் மலரும் நினைவுக்குச் சென்றார். அப்போது 1992-ல் நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது, கிரண் மோரேவை கிண்டல் செய்வது போல மியான்தத் துள்ளிக்குதித்த கிளிப்பிங்க்ஸ் வெளியானது.
அதுபற்றி ஸ்ரீகாந்த் கூறும்போது, ‘அந்த போட்டியின் நானும் ஆடினேன். மியான் தத், மோரேவிடம், ’ஏன் எப்ப பார்த்தாலும் ஓ ஓவோன்னு கத்திட்டே இருக்கே’ என்று கேட்டார். அதற்கு மோரே, ’அப்படி ஒண்ணும் கத்தலையே’ என்றார். இதுபற்றி அம்பயரிடம் புகார் சொன்னார் மியான் தத். பிறகு மோரே எல்பிடபிள்யூ அப்பீல் கேட்பது போல குதித்து குதித்து கிண்டலடித்தார் ஜாவித். இதே போல சென்னையில நடந்த ஒரு மேட்சில், எங்கிட்டயும் ஜாவித் ஒரு மாதிரி நடந்துகிட்டார். நான், இது எங்க ஊரு, எங்க ஏரியா, தொலைச்சுப்புடுவேன்’ன்னு மிரட்டிட்டேன்’ என்றார் ஸ்ரீகாந்த். அவரை அநியாயத்துக்கு கலைத்து எடுத்தார் ஆர்.ஜே.பாலாஜி.