காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரையில் இருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
காணும் பொங்கலையொட்டி ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தின் போது சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரையில் இருந்து 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகளும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன. குப்பைகளை அகற்றும் பணியில் 160க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் 27 டன் அளவிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 15 டன் அளவிலும் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது கடற்கரைகளில் நெகிழிக் குப்பைகள் குறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
வேலூரில் 6 நாட்களில் 3 கொலைகள்.. அச்சத்தில் மக்கள்..!
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்