ஓசூர் அருகே அதிவேகமாக திரும்பிய அரசுப் பேருந்திற்குள் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி அக்ஷயா (12). தடிக்கல் கிராமத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் அரசுப் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அரசுப் பேருந்து அதிவேகத்துடன் வளைவில் திரும்பியதால், பேருந்தில் இருந்த மாணவி அக்ஷயா மற்றும் பயணி வீரேஷ் ஆகியோர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த மாணவி அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வீரேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமான மற்றும் அதிவேக இயக்கத்தால் மாணவி இறந்த சம்பவம் மக்களிடையே சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai