உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் டயர் திடீரென வெடித்ததில் கார் நிலைதடுமாறி எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்றது.
அந்த சாலையில் வந்த தனியார் பேருந்து சற்றும் எதிர்பாராததால் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் ஓட்டுநர், 2 பெண்கள் ஒரு குழந்தை என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு குழந்தை தீவீர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்கள் பற்றிய எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.
சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்