இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 82 ஆயிரம் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் 81 ஆயிரத்து 758 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 57 சதவிகித தற்கொலைகள் 2018ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 159 மாணவ, மாணவிகள் தேர்வுகளில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் அதில் 8 சதவிகிதத்தினர் மாணாக்கர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மன அழுத்தம், மதுப்பழக்கத்திற்கு அடிமையாவது போன்றவையே காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
2018 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அடுத்ததாக தமிழ்நாட்டில் 953 மாணாக்கரும், மத்தியப் பிரதேசத்தில் 862 மாணாக்கரும், கர்நாடகாவில் 755 மாணாக்கரும், மேற்கு வங்கத்தில் 609 மாணாக்கரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?