இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 82 ஆயிரம் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் 81 ஆயிரத்து 758 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 57 சதவிகித தற்கொலைகள் 2018ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 159 மாணவ, மாணவிகள் தேர்வுகளில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் அதில் 8 சதவிகிதத்தினர் மாணாக்கர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மன அழுத்தம், மதுப்பழக்கத்திற்கு அடிமையாவது போன்றவையே காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
2018 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அடுத்ததாக தமிழ்நாட்டில் 953 மாணாக்கரும், மத்தியப் பிரதேசத்தில் 862 மாணாக்கரும், கர்நாடகாவில் 755 மாணாக்கரும், மேற்கு வங்கத்தில் 609 மாணாக்கரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்