தேனி கனரா வங்கியில் நகைக் கடன் அடமான விவகாரத்தில் 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக இருவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேனியில் உள்ள கனரா வங்கியில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தவர் செந்தில். இவர் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் கடன் தொகையை மாற்றி, போலி நகைகள் மூலம் போலியான பட்டியல் தயார் செய்து அதனை அடகு வைத்துள்ளார். இவ்வாறு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதை அறிந்த வங்கி மேலாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட வினோத் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அடகு வைத்த நகைகள் பறிபோனதோ என பொதுமக்கள் அச்சம் அடையத் தொடங்கினர். இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தேனி கனரா வங்கி தலைமை மேலாளர் சுப்பையா கொடுத்த புகாரின் அடிப்படையில், நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் உடந்தையாக இருந்த வினோத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 120 (பி)- கூட்டு சதி, 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அவர்களிடம் சிபிஐ நேரடி விசாரணையை தொடங்கவுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!