
திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மதிய உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி திண்டுக்கல் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் மதிய உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி திருவள்ளூர், மீஞ்சூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாக்கு எண்ணும் பணியை விட்டு 200க்கும் மேற்பட்டோர் புறக்கணித்துள்ளனர். காலை 8 மணிக்கு இட்லி சாப்பிட்டோம்; இதுவரை ஒரு டீ, பிஸ்கட் கூட வழங்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்துதரவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து அதிகாரிகளும் போலீசாரும் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.