புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நள்ளிரவு வேளையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிய திருமாவளவன், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள பனகல் மாளிகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அனசாரி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
இதேபோல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.. புதுக்கோட்டை, ஆவடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரசியல் கட்சியினரும், இஸ்லாமிய அமைப்பினரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையிலும் சுமார் 20 பேர் பதாகைகள் ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide