இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி கம்ருதீன் மற்றும் பாத்திமா கனி. இவர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.
அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த தனியார் பேருந்தின் பின் சக்கரம், பாத்திமா மீது ஏறியது. இந்த விபத்தில் கணவர் கண் முன்னே அவர் உடல்நசுங்கி உயிரிழந்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai