வரிஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் சாமியார் கல்கிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் 44 கோடி ரூபாய் ரொக்கம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கல்கி ஆசிரமம் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் தெரியவந்தது. இந்த நிலையில் சாமியார் கல்கி குடும்பத்தினருக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த சொத்துகள் அனைத்தும் ஆசிரமத்தின் நம்பத்தகுந்த பக்தர்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஆன்மிக பள்ளிகளின் ஊழியர்கள் பெயரில் வாங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட நிலங்கள் கோவை, உதகை, சத்தியவேடு, பெல்காம் ஆகிய ஊர்களில் இருப்பதாகவும், அதுகுறித்த விவரங்கள் நிலப்பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'