உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த அந்த பெண் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தீக்குளித்தார். ஹசன்கஞ்ச் நகரில் உள்ள காவல்நிலையத்தில் தீக்காயங்களுடன் பெண் நுழைந்ததை கண்டு காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அந்தப் பெண் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் 70 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் முன்ஜாமீன் பெற்று விட்டனர் என்றும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கும், அந்த பெண்ணுக்கும் 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது என்றும் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் நிர்ப்பந்தம் செய்தை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை என கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்ற போது பேசும் நிலையில் அவர் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!