மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம், சட்ட விரோதமானதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம், சட்ட விரோதமானதல்ல என தெரிவித்துவிட்டது. அத்துடன் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஒருவரது சட்டப்படியான உரிமையே; அடிப்படை உரிமை அல்ல எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!