ஐ.டி. ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என இன்ஃபோசிஸின் முன்னாள் நிதித்துறை தலைமை அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால், ஐ.டி. துறைக்கு தொழிற்சங்கங்கள் தேவை இல்லை என இன்போசிஸ் நிறுவன முன்னாள் நிதித்துறை தலைமை அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.டி. துறையில் தற்போது சற்று தேக்கநிலை காணப்பட்டாலும், அது விரைவில் சீரடையும் என்றார். எப்போதெல்லாம் இத்தகைய தேக்கநிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் நுழைய முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். “ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தினாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் ஐ.டி. துறைதான் அதிக ஊதியத்துடன், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக வாய்ப்புகள் கொண்ட துறையாக இருக்கிறது” என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், இந்திய ஐ.டி. துறை கடந்த ஆண்டு 150 பில்லியன் டாலர்களை சம்பாதித்து, ஒற்றை இலக்க வளர்ச்சியை கண்டிருந்தாலும், அடுத்த ஆண்டு இது இரட்டை இலக்கமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!