பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற 78 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்-ம் எம்.டி.என்.எல்-ம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த நிதியாண்டு மட்டும் இவற்றின் நஷ்டம் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இதை சரி செய்வதற்காக கடந்த நவம்பர் 4ம் தேதி விருப்ப ஓய்வு திட்டம் தொடங்கியது.
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.எஸ்.என்.எல்லில் 78 ஆயிரத்து 300 பேரும், எம்.டி.என்.எல்லில் 14 ஆயிரத்து 378 பேரும் மொத்தம் 92 ஆயிரத்து 700 பேர் விருப்ப ஓய்வு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் பணியாளர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பின் அது 7 ஆயிரம் கோடி ரூபாயாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பின் பி.எஸ்.என்.எல் பணியாளர்கள் எண்ணிக்கை சரிபாதியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல டெல்லி, மும்பையில் மட்டும் சேவை தந்து வரும் எம்.டி.என்.எல் நிறுவனமும் விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் சேமிக்கும் எனத் தெரிகிறது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்