''லேண்டரை ஆர்பிட்டர் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது'' - இஸ்ரோ தலைவர் சிவன்

''லேண்டரை ஆர்பிட்டர் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது'' - இஸ்ரோ தலைவர் சிவன்
''லேண்டரை ஆர்பிட்டர் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது'' - இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை முன்னரே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களின் புகைப்படங்களை நாசா நேற்று வெளியிட்டது. இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியுள்ளார் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோவின் தலைவர் சிவன், ''இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது. இது குறித்து எங்கள் இணையப்பக்கத்தில் ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். வேண்டுமென்றால் நீங்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10ம்தேதி ட்வீட் செய்துள்ள இஸ்ரோ, ''விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கண்டறிந்துவிட்டது. ஆனால் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை'' என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, நாசாவுக்கு அனுப்பிய தகவல்கள் குறித்து சிவசுப்ரமணியன் கூறிய போது, “நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். அக்டோபரில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்தேன்.

பின்னர் நாசா, நவம்பரில் எடுத்த புகைப்படத்தை வைத்து லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வைத் தொடர்ந்தேன்” என தெரிவித்திருந்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com