மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுத்து வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மத்திய அரசு கொண்டுவந்துள்ள கால்நடை விற்பனை தடைச்சட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்த பினராயி விஜயன், அச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், இப்பிரச்னையில் அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் இந்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது, ஏழை மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை எனவும், புதிய விதிமுறைகளால் இறைச்சிக் கூடங்களின் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி