பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார்.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத் தொடக்க விழாவில் நேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். அதோடு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் 2 அடி நீளக் கரும்பும் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுத் தொகுப்புக்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு திட்டத்தை நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?