இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்து, 5 நாட்கள் டெல்லி போலீஸார் விசாரித்தனர், பின்னர் மே.1 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிகள் டிடிவி தினகரனை மே 15 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மே 15 ஆம் தேதி கானொலிக்காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிகள் மே 29 ஆம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.
மே 29 இன்றுடன் 15 நாட்கள் நீதிமன்றக்காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜீன் 12 ஆம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
இதனிடையே டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா இருவரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் இன்று முடிவடைந்தது. ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் ஜாமீனில் வெளிவருவாரா என்பது வரும் மே 31 ஆம் தேதி தெரியவரும்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!