பள்ளிச் சீருடைகளுக்காக நெசவாளர்களிடம் நேரடியாகத் துணி கொள்முதல் செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளின் சீருடைகளுக்கான துணியை நேரடியாக கைத்தறி நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? சிறுவந்தாடு பட்டு நெசவு மையத்தை புனரமைப்பதற்கும், நெசவாளர்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கும் மத்திய அரசு உதவுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சீருடைகளுக்கு நேரடியாக நெசவாளர்களிடமிருந்து துணியை வாங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுத் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சிகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் ஸ்மிருதி இரானியின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide