கடலூர் அருகே சகோதர சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடியினர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த சுவதியும், கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. திருமணம் செய்துகொள்ளும் முறையில்லை, சகோதர சகோதரி முறை என்பதால் எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி நேற்று இரவு ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரயில் என்ஜின் ஒட்டுநர் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!