ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வோரை காவலர்கள் எச்சரித்துப் பார்த்திருப்போம். அதே பணியை சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நாய் ஒன்று செய்து வருகிறது.
சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து குரைத்தபடி அவற்றை பின்தொடர்ந்து செல்லும் நாய்களுக்கு மத்தியில், ஒரு நாய் ரயில்களையே துரத்துகிறது. அதன் பெயர் சின்னப்பொண்ணு. பொதுவாக நாய்களுக்கு மணி, ராமு, டைகர், ஸ்வீட்டி எனப் பெயர் வைப்பார்கள். ஆனால் சின்னப்பொண்ணு பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் வித்தியாசமானது.
கடந்த சில ஆண்டுகளாக பூங்கா ரயில் நிலையத்தில் சுற்றி வரும் சின்னப்பொண்ணு, யாருக்கும் எந்த தொந்தரவும் தருவதில்லை. மாறாக படியில் தொங்கியபடி ரயிலில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறது.
நடைமேடையில் படுத்திருக்கும் சின்னப்பொண்ணு ரயில் வரும் போது எழுந்து நிற்கிறது. படியில் தொங்கியபடி வருபவர்களை பார்த்து குரைத்தபடி ரயிலை துரத்திக் கொண்டு ஓடுகிறது. படியில் தொங்குபவர்களை மட்டுமல்ல, தண்டவாளத்தை கடப்பவர்களையும் சின்னப்பொண்ணு விட்டு வைக்கவில்லை. அவர்களைப் பார்த்து குரைக்கிறது. அதைக்கண்டு படியில் தொங்குபவர்கள் உள்ளே செல்கிறார்கள். மேலும் சின்னப்பொண்ணு காவலர்களோடு சேர்ந்து ரோந்து செல்கிறது. இப்படி ஒவ்வொரு ரயிலுக்குப் பின்னும் ஓடி ஓடி பலரின் உயிரைக் காக்கிறது சின்னப்பொண்ணு.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!