புதிய பயணத்தில் அனைவரும் சேர்ந்து பயணிப்போம் என்று அதிபர் தேர்தலில் முன்னிலையிலுள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச களம் கண்டுள்ளார். அதேபோல இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபய ராஜபக்ச இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற தேவையான 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை கோத்தபய ராஜபக்ச பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, கோத்தபய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல அதிபர் தேர்தலில் முன்னிலையிலுள்ள கோத்தபய ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இலங்கை அதிபராக நான் தொடங்கவுள்ள புதிய பயணத்தில் இலங்கை மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும். நாம் தேர்தலுக்கு எவ்வாறு அமைதியாக பரப்புரை செய்தோமோ அதேபோல அமைதியாகவும் மரியாதையுடனும் ஆட்சியில் பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!