நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில்தான் தீவிரவாதத்தின் மரபணு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. உலக அரங்கில் ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அனன்யா அகர்வால் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பேசிய அவர், மோசமான நிர்வாகத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பாகிஸ்தானில் தீவிரவாதத்தின் ஆணி வேர் இருப்பதாகவும், அந்நாடு தீவிரவாதத்தின் சமூகமாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், பின்லேடன், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் நாயகர்களாக சித்தரித்து புகழாரம் சூட்டியிருப்பதை அனன்யா அகர்வால் சுட்டிக்காட்டினார். 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 23 சதவிகிதம் இருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவையே காரணம் என அனன்யா அகர்வால் தெரிவித்தார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்