சென்னை அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை, மாதவரம் 200 அடி சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாதவரம் சரக போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போக்குவரத்து போலீஸார், சொந்த செலவில் சாலையை சீரமைத்தனர்.
சேதமடைந்திருந்த சாலையில் உள்ள பள்ளங்களை காங்கிரீட் சிமெண்ட் கலவை மூலம் நிரப்பி அவர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் குண்டும் குழியுமான சாலை சீரானது. தங்களின் பணிச்சுமைக்கு இடையிலும் பொதுநலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!