பைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு 

பைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு 
பைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு 

திருக்கடையூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் கண்ணகி(27). இவரும் இவரது தோழி பிரமிளா என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கடையூர் சென்றுவிட்டு தரங்கம்பாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருக்கடையூர் ஆர்ச் அருகே பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர்லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில் தூக்கி எறியப்பட்டு தலையில் படுகாயமடைந்த கண்ணகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த பிரமிளா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொறையார் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிப்பர்லாரி ஓட்டுநர் சம்பத்குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com