விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியில் அரசுப் பேருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி சென்றது. கம்மாபுரம் பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த இருசக்கரவாகனம் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோபாலபுரத்தை சேர்ந்த பசுபதி, குமாரமங்கலத்தை சேர்ந்த பிரம்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்