பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஊழல் தொடர்பான வழக்கிலும், சர்க்கரை ஆலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது நவாஸ் ஷெரிஃப்பின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவரின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
இதனால், சர்க்கரை ஆலை வழக்கில் உடல்நிலை கருதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் நவாஸ் ஷெரிஃப்பிற்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர். எனினும் நவாஸ் ஷெரிஃப் ஊழல் வழக்கில் இன்னும் ஜாமீன் பெறாததால் அவர் காவல்துறையினர் கட்டுபாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் ஊழல் வழக்கு தொடர்பான ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!