கல்லூரியில் தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைப்பெட்டி மாட்டப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹவேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்கவும், பிறரை பார்த்து எழுதுவதை தடுக்கவும் நூதன முயற்சி ஒன்று எடுக்கப்பட்டது. அதன்படி, மாணவர்களின் தலையில் காலியான அட்டைப்பெட்டி ஒன்று ஹெல்மெட் போல் அணிவிக்கப்பட்டது. இது காண்பதற்கு குதிரைக்கு சேனை கட்டியிருப்பது போல தோன்றியது.
தலையில் அட்டைப்பெட்டி அணிந்தபடி மாணவர்கள் தேர்வு எழுதிய புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காப்பி அடிப்பதை தடுக்க இப்படியொரு முறையா என வியப்பாக பார்த்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக டிபிஐ-யின் துணை இயக்குநர் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகள் போன்று நடத்தும் உரிமையை யாருக்கும் கிடையாது. இந்த முறையற்ற செயலுக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix