சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 21 ஆம் தேதி வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும், மகாராஷ்டிரா மாநிலத்தை வறட்சியிலிருந்து காக்கும் நடவடிக்கையும் எடுக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே மற்றும் சாவர்க்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களுள் ஒருவராவர். அத்துடன் இவர் இந்துத்துவா கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!