
சீன அதிபர் வருகையையொட்டி 22 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார். மாமல்லபுரத்தில் சீன அதிபரும் பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். அதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.
இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி 22 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈச்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் தடை விதிக்கப்பட்டுள்ளது.