உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோ சாலையில் 22 பசுக்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்து உயிரிழந்தன.
உத்திரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியில் அமைந்துள்ள கோ சாலை ஒன்றில் 70க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டன. இந்நிலையில் வழக்கம் போல் தீவன இலை கொடுக்கப்பட்டு பசுக்கள் ஓய்வாக கட்டப்பட்டன. சிறிது நேரத்திலேயே பசுக்கள் எல்லாம் வரிசையாக சரிந்து விழுந்து உயிரிழந்தன. இதனைக் கண்ட பராமரிப்பு ஊழியர் உடனடியாக கோ சாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மருத்துவர்கள் குழுவுடன் கோ சாலைக்கு வந்த நிர்வாகம், மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக்குழு, பசுக்களின் தீவனம், தண்ணீர் ஆகியவற்றை சோதனை செய்தனர். அதேபோல் உயிரிழந்த பசுக்களின் உடற்கூராய்வும் செய்யப்பட்டது.
இதில் பசுக்கள் இரையாக உண்ட கம்பு இலைகளில் நைட்ரஜன் அளவு அதிகமாக இருந்துள்ளது என்றும், அதனால் நைட்ரேட் நஞ்சு தாக்கப்பட்டு பசுக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் மேற்கொண்டு சில சோதனைகளையும் மருத்துவக்குழு செய்துவருகின்றனர்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?