அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், சீன எல்லை அருகே இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதால், சீனா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சீன அதிபரின் சென்னை பயணம் தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் வரும் 11-ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், வரலாற்று பின்னணி கொண்ட மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய, சீன எல்லைப் பகுதி அமைந்திருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஹிம் விஜய் என்ற பெயரில் வரும் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையும், பின்னர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையும் இருகட்டங்களாக மலையேற்ற பயிற்சி நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவுக்கு தவறுதலான சமிக்ஞையை அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இந்திய பயணத்தை சீன அதிபர் ஒத்திப்போட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!