(கொலை செய்யப்பட்டவர்கள்)
சென்னை ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி சேக்காட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஜெகதீசன் - விலாஷினி தம்பதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் பணியாற்றிய சுரேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் ஜெகதீசன் - விலாஷினி தம்பதியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
தலைமறைவாகிவிட்ட அவர்களை ஆந்திரா, மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் லட்சுமியை ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுரேஷ் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இருவரும் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!